மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க ஒன்று கூட வேண்டும் - கோவையில் சமூக நீதி வழக்கறிஞர்கள் உறுதிமொழி

கோவை: மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினமான இன்று மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

கோவை: மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினமான இன்று மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.



1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்.1934ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று 6வது முறையாக அவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், தற்போது எழுந்துள்ள அரசியல் சூழலில் மதச்சார்பின்மையை காப்பாற்ற இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டும் எனவும் பி.யூ.சி.எல் மற்றும் சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிமன்ற நுழைவாயிலில் ஒன்றுகூடிய வழக்கறிஞர்கள் மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...