கோவை: மேட்டுப்பாளையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.கவினர் வெற்றி பெற்றனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.கவினர் வெற்றி பெற்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓடந்துரை, தோலம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.

காலை 11.00 மணிக்கு நடத்தப்பட்ட இந்த மறைமுக தேர்தலில் தோலம்பாளையம், ஓடந்துரை ஆகிய ஊராட்சிகளுக்கு மட்டுமே நடைபெற்றது. ஓடந்துரை ஊராட்சியில் ஒன்பது பேர் கொண்ட உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஆறு பேர் வாக்களித்து அ.தி.மு.கவை சேர்ந்த ஜானகி என்பவரை துணைத்தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதேபோல், தோலம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவை சேர்ந்த ரவிச்சந்திரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சின்னக்கள்ளிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வராததால் போதிய கோரம் இன்றி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, ஓடந்துரை ஊராட்சியில் அ.தி.மு.க சார்பில் இரண்டு பேர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ததால் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டி மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓடந்துரை, தோலம்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.

காலை 11.00 மணிக்கு நடத்தப்பட்ட இந்த மறைமுக தேர்தலில் தோலம்பாளையம், ஓடந்துரை ஆகிய ஊராட்சிகளுக்கு மட்டுமே நடைபெற்றது. ஓடந்துரை ஊராட்சியில் ஒன்பது பேர் கொண்ட உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஆறு பேர் வாக்களித்து அ.தி.மு.கவை சேர்ந்த ஜானகி என்பவரை துணைத்தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதேபோல், தோலம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவை சேர்ந்த ரவிச்சந்திரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சின்னக்கள்ளிபட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வராததால் போதிய கோரம் இன்றி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, ஓடந்துரை ஊராட்சியில் அ.தி.மு.க சார்பில் இரண்டு பேர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ததால் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டி மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.