கோவையில் தேசிய தொழு நோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

கோவை: தேசிய தொழு நோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற தேசிய தொழு நோய் விழிப்புணர்வு பேரணியை துணை ஆணையர்(கலால்) கலைவாணி துவக்கி வைத்தார்.

கோவை: தேசிய தொழு நோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற தேசிய தொழு நோய் விழிப்புணர்வு பேரணியை துணை ஆணையர்(கலால்) கலைவாணி துவக்கி வைத்தார்.

தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தொழுநோய் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோயாளிகள் உள்ள பகுதிகளில் வீடுகளில் முழுவதும் களப்பணி மேற்கொண்டு தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சிகிச்சையை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 89 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரி, ஜி.கே.என்.எம் செவிலியர் மாணவிகள், வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியை துணை ஆணையர்(கலால்) கலைவாணி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி பந்தய சாலையில் உள்ள சுகாதார இனை இயக்குனர் அலுவலகத்தில் நிறைவுற்றது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...