கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மெட்ரோ தனியார் பள்ளி சார்பில் இன்று குடியரசு தினவிழாவினை முன்னிட்டு சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மெட்ரோ தனியார் பள்ளி சார்பில் இன்று குடியரசு தினவிழாவினை முன்னிட்டு சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகளை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒருங்கிணைத்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், பொதுமக்கள் முன்னிலையில் சேகரம் செய்து எடுக்கப்பட்ட குப்பைகளை அங்கிருந்து துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.

மேலும், மனித குலத்திற்கு நோயினை அதிகரிக்க செய்யும் சுகாதார சீர்கேட்டினை போக்க சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்களாகிய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை மாணவ மாணவிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நாகராஜ், பள்ளி முதல்வர் சுலோக்சனா மற்றும் ஆசிரியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகளை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒருங்கிணைத்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், பொதுமக்கள் முன்னிலையில் சேகரம் செய்து எடுக்கப்பட்ட குப்பைகளை அங்கிருந்து துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.

மேலும், மனித குலத்திற்கு நோயினை அதிகரிக்க செய்யும் சுகாதார சீர்கேட்டினை போக்க சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்களாகிய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை மாணவ மாணவிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நாகராஜ், பள்ளி முதல்வர் சுலோக்சனா மற்றும் ஆசிரியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.