மேட்டுப்பாளையத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து தூய்மை விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!

கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மெட்ரோ தனியார் பள்ளி சார்பில் இன்று குடியரசு தினவிழாவினை முன்னிட்டு சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் மெட்ரோ தனியார் பள்ளி சார்பில் இன்று குடியரசு தினவிழாவினை முன்னிட்டு சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகளை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒருங்கிணைத்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், பொதுமக்கள் முன்னிலையில் சேகரம் செய்து எடுக்கப்பட்ட குப்பைகளை அங்கிருந்து துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தினர். 



மேலும், மனித குலத்திற்கு நோயினை அதிகரிக்க செய்யும் சுகாதார சீர்கேட்டினை போக்க சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் அதற்கு பொதுமக்களாகிய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை மாணவ மாணவிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் நாகராஜ், பள்ளி முதல்வர் சுலோக்சனா மற்றும் ஆசிரியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...