திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி ஜல்லிக்கட்டு..! அனைத்து காளைகளும் பங்கேற்க நடவடிக்கை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து காளைகளும் பங்கேற்க விழாக்குழுவினர் உடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சாலை பாதுகாப்பு வார விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து காளைகளும் பங்கேற்க விழாக்குழுவினர் உடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சாலை பாதுகாப்பு வார விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூரில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த விளங்கிய ஓட்டுநர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவிகிதம் விபத்துக்கள் குறைந்துள்ளதாக கூறினார்.



தமிழகத்தை பொருத்தவரை திருப்பூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் விபத்துக்களை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றார்.

திருப்பூரில் பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் காளைகள் பதிவு செய்வதில் குளறுபடிகள் இருப்பதை களைய ஜல்லிக்கட்டு குழுவினரை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து காளைகளும் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றவர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு இணை இயக்குநர் தலைமையில் சிறப்பு மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மா ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படுவதாகவும், காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...