கோவை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து இன்று கோவை கவுண்டம்பாளையம் பணிமனையில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து இன்று கோவை கவுண்டம்பாளையம் பணிமனையில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், இன்று TN-01 AN 2371 என்ற எண் கொண்ட எஸ்.இ.டி.சி., பேருந்தானது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து சம்பவத்தை நேரில் பார்த்த பார்த்தசாரதி என்பவர் நேரடியாக அருகே உள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்தார்.

பின்னர் பணிமனைக்கு விரைவாக வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தீ அணைக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்ததால் தீயானது அருகே உள்ள பேருந்துகளில் பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.