கோவையில் கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இதுவரை இல்லை - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தாக்குதல் இதுவரை இல்லை என்றும் இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் மருத்துவர்கள் சோதனையில் உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தாக்குதல் இதுவரை இல்லை என்றும் இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் மருத்துவர்கள் சோதனையில் உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட துறை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி ரேஸ்கோர்ஸ் வரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, தேர்தல் மற்றும் வாக்காளர்களை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் இந்த பேரணி நடைபெற்றது என்றார். மேலும் தற்போது பரவிவரும் கோரோனா வைரஸ் பற்றி கேட்கையில், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த வைரஸ் தாக்குதல் இதுவரை இல்லை என்றும் இருப்பினும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் மருத்துவர்கள் சோதனையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு கோவை ரேஸ் கோர்சில் உள்ள காவல் நிலையத்தை சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்ததற்கு காவலர்கள் தான் காரணம் என்றும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார். மேலும், கோவை மாவட்டமானது அமைதிக்கு பெயர் போன மாவட்டம் என்றும் கோவை மக்கள் அனைவரும் அமைதியை பறைசாற்றக் கூடிய மக்கள் என்றும் பெருமிதம் தெரிவித்த அவர், கோவை மக்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...