நீலகிரியில் கட்டுமான பணிகள் முடிந்தும் திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் வீடுகள்..! பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சியில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட 30 வீடுகள் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத நிலையில், உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சியில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட 30 வீடுகள் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத நிலையில், உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் நீலகிரியில் பெய்த பலத்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக நடுவட்டம் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.

அப்போது, மழை சேதங்களை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வீடுகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் மாற்று இடம் வழங்கப்படும் என கூறினார்.



இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா உத்தரவின் படி, நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகிம் மேற்பார்வையில் நடுவட்டம் அரசு மாணவர் விடுதி அருகே உள்ள காலி இடத்தில் குடிநீர், கழிப்பிடம், மின் இணைப்பு என அனைத்து வசதிகளுடன் 30 வீடுகள் கட்டப்பட்டன.



இந்த வீடுகள் அனைத்து பணிகளும் முடிவடைந்தும் திறக்கப்படாமல் உள்ள நிலையில், வீடுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள், இந்த வீடுகள் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...