கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சி -2 பந்தய சாலை (Race Course) காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல்நிலையத்திற்க்கான தகுதியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சி -2 பந்தய சாலை (Race Course) காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல்நிலையத்திற்க்கான தகுதியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் நாட்டில் சிறந்த பத்து காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதானது கடந்த 2017 ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஆர் எஸ் புரம் காவல்நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டிற்க்கான விருதுகள் பெற கோவை மாநகரில் உள்ள சி-2 பந்தய சாலை காவல் நிலையமும், போத்தனூர் டி-3 காவல் நிலையமும் தயாராகியது.

இதில் குறிப்பாக சி-2 காவல் நிலையத்தில் புகார் தர வரும் பொது மக்களை வரவேற்கும் வகையில் வரவேற்பறையில் இருந்து, சுத்திகரித்த குடிநீர், குழந்தைகள் விளையாடும் வகையில் காப்பகம், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை, காவலர்களுக்கு ஓய்வரை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி லாக்கப், குற்ற பதிவேடுகளை காக்கும் அரை என பல்வேறு வசதிகள் செய்யபட்டது.

இப்படியிருக்க, தற்போது 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக கோவை பந்தய சாலை காவல் நிலையம் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது கோவை மாநகர காவல் துறையினர் மத்தியிலும் கோவை மாநகர பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது.