கோவை: கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது டெம்போ டிராவலர் பழுதடைந்து இருந்ததால் அதனை சரி செய்ய நீலாம்பூரில் உள்ள ஒரு வொர்க் ஷாப்பிற்கு ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது, அவிநாசி சாலை வழியாக பீளமேடு சர்தர் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப கல்லூரி அருகே வந்த போது, வண்டியின் முன்பக்கம் புகை வந்துள்ளது. இதனை பார்த்த முருகன் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி கீழிறங்கி பேனட்டினை திறந்து வெயர்களை வெட்ட முயன்றுள்ளார். அதற்குள் தீ மளமளவென வாகனம் முழுவதும் பரவியது. இதில் டெம்போ டிராவலர் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த அவிநாசி சாலையில் டெம்போ டிராவலர் வாகனம் தீக்கிரையான சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.