கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமில் ரெட்டை திருப்பதி யானை மவுத் ஆர்கன் வாசிப்பதை ரஷ்ய குழுவினர் கண்டு ரசித்தனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமில் ரெட்டை திருப்பதி யானை மவுத் ஆர்கன் வாசிப்பதை ரஷ்ய குழுவினர் கண்டு ரசித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி துவங்கிய இந்த முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்த முகாமினை காண்பதற்கு ரஷ்யா நாட்டு கலாச்சார நடனக்குழுவினர் வருகை தந்தனர்.
இந்திய ரஷ்யா கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அந்த குழு, மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமிற்கு வருகை புரிந்து கண்டு ரசித்தனர். முகாமிற்கு வந்த ரஷ்ய கலைஞர்களை முகாம் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்
மிகவும் குளிர்பிரதேசமான ரஷ்யாவில் யானைகள் என்பதே இல்லாத நிலையில், இதுவரை பாட புத்தகங்களிலும் புகைப்படங்களில் மட்டுமே கண்ட பேருயிரினமான யானையை ரஷ்யா குழுவினர் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் குளிப்பது, உணவு உண்ணுதல், அசைபோடுதல் மற்றும் அவைகள் செய்யும் குறும்புத்தனத்தைப் பார்த்து ரசித்தனர். மேலும் யானை குளிப்பாட்டும் இடங்களையும் பார்வையிட்ட அக்குழு பாகன்களுடன் இணைந்து யானைகளை குளிக்க வைத்தனர்.

இதனையடுத்து, முகாமில் கட்டிவைக்க பட்டிருந்த யானை ரெட்டை திருப்பதி, லட்சுமி, ரஷ்ய நாட்டு குழுவினரை வரவேற்கும் விதமாக மவுத்ஹர்கன் வாசித்து அவர்களை உற்சாகப்படுத்தியது ,யானையையே கண்டிராத ரஷ்யா குழு யானையின் இந்த திறமையை பாராட்டியதுடன் அந்த யானையுடன் நின்று தனித்தனியே மற்றும் குழுவாக புகைப்படமும் எடுத்து கொண்டனர்