திருப்பூரில் உடலில் வெட்டுகாயங்களுடன் அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு; போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் உடலில் வெட்டுகாயங்களுடன் அழுகிய நிலையில் பனியன் தொழிலாளியின் சடலம் கண்டெடுத்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

திருப்பூர்: திருப்பூரில் உடலில் வெட்டுகாயங்களுடன் அழுகிய நிலையில் பனியன் தொழிலாளியின் சடலம் கண்டெடுத்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள முட்புதரில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி சோதனை மேற்கொண்டதில், உயிரிழந்த வாலிபரின் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததோடு, கொலை நடந்து இரண்டு நாட்கள் இருக்கக்கூடும் என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த வாலிபர் திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியை சேர்ந்த அருண் குமார் (23) என்பதும், இவர் குடும்பத்தோடு அதே பகுதியில் தங்கிக் கொண்டு, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், கடந்த வெள்ளிக்கிழமை வேலை சென்றவர் வீடு திரும்பாத நிலையில் நேற்று வெட்டுகாயங்களுடன் சடலமாக இருந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கொலை நடந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...