கோவையில் பொங்கல் விழாவில் முன்விரோதம் காரணமாக நடந்த கத்திக்குத்தில் இளைஞர் பலி; ஒருவர் கைது - இருவருக்கு போலீசார் வலைவீச்சு

கோவை: கோவை அடுத்த ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அம்மன் குளம் பகுதியில் பொங்கல் விழாவில் ஏற்பட்ட விரோதத்தில் இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அடுத்த ராமநாதபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அம்மன் குளம் பகுதியில் பொங்கல் விழாவில் ஏற்பட்ட விரோதத்தில் இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த மூன்று நாட்களாக பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதேபோல, கோவை புலியகுளம் அருகேயுள்ள அம்மன் குளம் பகுதியில் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றாக கபடி போட்டிகளும் நடைபெற்றது. 

இந்த போட்டியில் அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் மூன்று வெளியூர் கபடி வீரர்களை வைத்து கபடி போட்டியில் விளையாடி உள்ளார். இதனால் உள்ளூர் குழுவினருடன் வாக்குவாதம் மூண்டுள்ளது.

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு தொக்கி என்ற விஜயகுமார், அவரது தம்பி கள்ளி என்ற கண்ணன் மற்றும் மற்றொரு நபர் என சேர்ந்து நவீன் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது, விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆத்திரத்தில் நவீனை சரமாரியாக குத்தி தப்பிச் சென்றார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதை தொடர்ந்து டி-1 ராமநாதபுரம் போலீசார் நவீன்குமார் மரணம் தொடர்பாக கொலை வழக்காக பதிவு செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயகுமார், தலைமைக் காவலர்கள் ஆனந்த் குமார், வேலுமயில், சத்தியமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் முக்கிய குற்றவாளியான தொக்கி என்ற விஜயகுமாரை கைது செய்தனர். மேலும், விஜயகுமாரின் சகோதரர் கண்ணன் மற்றும் மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...