கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் தலை முடியை சிகை அலங்காரம் செய்து மண்ணார்குடி கோபாலசுவாமி யானை செங்கமலம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
கோவை: மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் தலை முடியை சிகை அலங்காரம் செய்து மண்ணார்குடி கோபாலசுவாமி யானை செங்கமலம் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப் படுகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ந் தேதி தொடங்கி தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகின்றது.
இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திருக்கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் முகாமில் பங்கேற்று புத்துணர்வு பெற்று வருகின்றன. யானைகளை பராமரிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சில யானைகள், முகாமில் உள்ள மற்றவர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடி கோபாலசுவாமி யானை செங்கமலம் தனது நீண்ட கூந்தலால் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. 12வது ஆண்டாக மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டுள்ள இந்த யானைக்கு மட்டுமே தமிழ்நாட்டிலேயே வேறு எந்த யானைக்கும் இல்லாத அளவுக்கு மிக நீண்ட கூந்தலை கொண்டுள்ளது என்ற சிறப்பினை பெற்றுள்ளது.

இதற்காக யானையின் பாகன் சிறப்பு கவனம் எடுத்து யானையின் கூந்தலை பராமரிக்க தனி கவனம் செலுத்தி வருகிறார். யானையை குளிக்க வைக்கும் போது அதன் முடியை பராமரிக்க பெண்கள் பயன்படுத்துவது போல் சீகைக்காய், மருதாணி, ஆர்காணிக் சேம்பு(Shampoo) போன்ற பொருட்களை பயன்படுத்தி சுமார் எட்டு ஆண்டுகளாக யானையின் கூந்தலை பராமரித்து வருகிறார்.
பொதுவாக யானைகளுக்கு கூந்தல் என்பது மிகவும் அரிது, ஒரு சில யானைகளுக்கு மட்டுமே அதுபோன்ற கூந்தல் வரும். அவ்வாறு வரும் கூந்தலை தனிக்கவனம் செலுத்தி பராமரித்து சுமார் மூன்று அடிக்கும் மேல் வளரும் வகையில் பராமரித்து வருகிறார் யானை பாகன் ராஜகோபால். இதன் காரணமாக முகாமில் 28 யானைகள் இருந்தாலும் செங்கமலம் யானை தனி கவனத்தைப் பெற்றுவருகிறது. அத்துடன் யானைகள் முகாமினை காணவரும் பார்வையாளர்களையும் குழந்தைகளின் கவனத்தையும் ஈர்க்கும் செங்கமலம் பாப் கட்டிங் யானை என்ற செல்ல பெயரையும் பெற்று வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப் படுகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12வது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கடந்த மாதம் 15 ந் தேதி தொடங்கி தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகின்றது.
இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த திருக்கோவில் மற்றும் திருமடங்களை சேர்ந்த 28 யானைகள் முகாமில் பங்கேற்று புத்துணர்வு பெற்று வருகின்றன. யானைகளை பராமரிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட சில யானைகள், முகாமில் உள்ள மற்றவர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மண்ணார்குடி கோபாலசுவாமி யானை செங்கமலம் தனது நீண்ட கூந்தலால் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. 12வது ஆண்டாக மேட்டுப்பாளையம் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில் கலந்து கொண்டுள்ள இந்த யானைக்கு மட்டுமே தமிழ்நாட்டிலேயே வேறு எந்த யானைக்கும் இல்லாத அளவுக்கு மிக நீண்ட கூந்தலை கொண்டுள்ளது என்ற சிறப்பினை பெற்றுள்ளது.

இதற்காக யானையின் பாகன் சிறப்பு கவனம் எடுத்து யானையின் கூந்தலை பராமரிக்க தனி கவனம் செலுத்தி வருகிறார். யானையை குளிக்க வைக்கும் போது அதன் முடியை பராமரிக்க பெண்கள் பயன்படுத்துவது போல் சீகைக்காய், மருதாணி, ஆர்காணிக் சேம்பு(Shampoo) போன்ற பொருட்களை பயன்படுத்தி சுமார் எட்டு ஆண்டுகளாக யானையின் கூந்தலை பராமரித்து வருகிறார்.
பொதுவாக யானைகளுக்கு கூந்தல் என்பது மிகவும் அரிது, ஒரு சில யானைகளுக்கு மட்டுமே அதுபோன்ற கூந்தல் வரும். அவ்வாறு வரும் கூந்தலை தனிக்கவனம் செலுத்தி பராமரித்து சுமார் மூன்று அடிக்கும் மேல் வளரும் வகையில் பராமரித்து வருகிறார் யானை பாகன் ராஜகோபால். இதன் காரணமாக முகாமில் 28 யானைகள் இருந்தாலும் செங்கமலம் யானை தனி கவனத்தைப் பெற்றுவருகிறது. அத்துடன் யானைகள் முகாமினை காணவரும் பார்வையாளர்களையும் குழந்தைகளின் கவனத்தையும் ஈர்க்கும் செங்கமலம் பாப் கட்டிங் யானை என்ற செல்ல பெயரையும் பெற்று வருகிறது.