கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 1100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழாவை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர். மாணவ மாணவிகள் தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக வேட்டி சேலை அணிந்து வந்தனர்.

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வகுப்புகள் வாரியாக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மைதானத்தில் கோலமிட்டு கரும்பு, மஞ்சள் பலூன் தோரணங்களோடு பொங்கல் வைத்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் பொன் முத்துராமலிங்கம் பொங்கல் பானையில் அரிசியை இட்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பொங்கல் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாணவ மாணவிகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். படைக்கப்பட்ட பொங்கலை சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கு பெற்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 1100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழாவை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர். மாணவ மாணவிகள் தமிழ் பண்பாட்டை வலியுறுத்தும் விதமாக வேட்டி சேலை அணிந்து வந்தனர்.

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வகுப்புகள் வாரியாக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மைதானத்தில் கோலமிட்டு கரும்பு, மஞ்சள் பலூன் தோரணங்களோடு பொங்கல் வைத்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் பொன் முத்துராமலிங்கம் பொங்கல் பானையில் அரிசியை இட்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பொங்கல் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாணவ மாணவிகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். படைக்கப்பட்ட பொங்கலை சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கு பெற்றனர்.