கோவை: கோவை அடுத்த போத்தனூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு கடன் விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் என கூறி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மிரட்டல் விடுத்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை அடுத்த போத்தனூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு கடன் விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் என கூறி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மிரட்டல் விடுத்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை போத்தனூர் அருகே உள்ள சங்கமம் நகரை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி ராஜேஸ்வரி (49). இவர் ராம்நகர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் ராஜேஸ்வரி பிரதீப்குமார் என்பவருக்கு தொழில் தேவைக்காக கடன் கொடுத்து உள்ளார். ஆனால் பணம் பெற்றுக்கொண்ட பிரதீப்குமார் திருப்பி தர காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ராஜேஸ்வரி செல்போனுக்கு பிரதீப்குமாரின் தம்பி பிரசாந்த், தான் காட்டூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் சதாசிவம் என தெரிவித்ததோடு பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரி காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிரசாந்த் மீது ஆள் மாறாட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.