கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கடைகளில் நெகிழி பயன்பாடு அதிகரித்திருப்பதாக நகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்ததை தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கடைகளில் நெகிழி பயன்பாடு அதிகரித்திருப்பதாக நகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்ததை தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பூக்கடைகள், கோலப்பொடி கடைகள் பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் நெகிழி பயன்படுத்தப்படுவதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தார். மேலும், அக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சந்தை மற்றும் கடை உரிமையாளர்களிடம் நெகிழி பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அபராதம் மட்டுமின்றி கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். இவ்வாய்வில், நெகிழி பயன்படுத்திய 13 கடைகளுக்கு தலா ரூ 1000 வீதம் அபராதம் விதித்தார். 24 கடைகளுக்கு எச்சரிக்கை குறிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு அங்குள்ள பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன் சுகாதாரமாக வைத்திருக்க ஆணையர் அறிவுறுத்தினார். மேலும், மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

பூக்கடைகள், கோலப்பொடி கடைகள் பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் நெகிழி பயன்படுத்தப்படுவதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தார். மேலும், அக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சந்தை மற்றும் கடை உரிமையாளர்களிடம் நெகிழி பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அபராதம் மட்டுமின்றி கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். இவ்வாய்வில், நெகிழி பயன்படுத்திய 13 கடைகளுக்கு தலா ரூ 1000 வீதம் அபராதம் விதித்தார். 24 கடைகளுக்கு எச்சரிக்கை குறிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு அங்குள்ள பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன் சுகாதாரமாக வைத்திருக்க ஆணையர் அறிவுறுத்தினார். மேலும், மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.