நீலகிரி: காேத்தகிரி ஊராட்சி ஒன்றிய துணைதலைவர் பதவிக்கான பாேட்டியில் திமுக அல்லது காங்கிரஸ் உறுப்பினர் வாக்கினை மாற்றி அதிமுகவிற்கு போட்டதால் கடைசி நிமிடத்தில் துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்தது.
நீலகிரி: காேத்தகிரி ஊராட்சி ஒன்றிய துணைதலைவர் பதவிக்கான பாேட்டியில் திமுக அல்லது காங்கிரஸ் உறுப்பினர் வாக்கினை மாற்றி அதிமுகவிற்கு போட்டதால் கடைசி நிமிடத்தில் துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்தது.
நீலகிரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக வைச் சேர்ந்த ராம்குமார் வெற்றி பெற்றுள்ள நிலையில் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று மதியம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர், கிருஷ்ணன் வெற்றி உறுதியாகி இருந்த நிலையில் திமுக வேட்பாளர் அற்புதராஜ் வாக்களிக்க தாமதமாக வந்தார் என்பதால் அவரது வாக்கு ஏற்றுக் காெள்ளப்படவில்லை.
மேலும், ஒரு வாக்கு திமுக கூட்டணியி்ல் இருந்து மாற்றி அதிமுகவிற்கு சென்றதால் மொத்தமுள்ள 14 உறுப்பினர்களி்ல் 13 வாக்குகள் பதிவாகின, இதில் அதிமுக 7 வாக்குகளும், திமுக 6 வாக்குகளும் பெற்றதால் கடைசி நிமிடத்தில் துணை தலைவர் பதவியை திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் தவறவிட்டது.
இதனைத் தாெடர்ந்து அதிமுக ஊராட்சி மன்ற துணை தலைவராக தேவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"மொத்த முள்ள 14 இடங்களில் திமுக 6 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தலைவர் பதவியை திமுகவும் துணைத் தலைவர் பதவி காங்கிரஸிற்கும் என திமுக தலைமை அறிவித்திருந்த நிலையி்ல், திமுக உறுப்பினர் தாமதமாக வந்து வாக்களிக்க முடியாமல் சென்றதும், மற்றொரு வாக்கினை கூட்டணியில் இருந்த ஒருவர் மாற்றி அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தது தொடர்பாக விசாரித்து தலைமைக்கு தெரிவிக்கப்படும்", என திமுக மாவட்ட செயலாளர் முபாரக் தெரிவித்தார்.
நீலகிரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக வைச் சேர்ந்த ராம்குமார் வெற்றி பெற்றுள்ள நிலையில் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று மதியம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர், கிருஷ்ணன் வெற்றி உறுதியாகி இருந்த நிலையில் திமுக வேட்பாளர் அற்புதராஜ் வாக்களிக்க தாமதமாக வந்தார் என்பதால் அவரது வாக்கு ஏற்றுக் காெள்ளப்படவில்லை.
மேலும், ஒரு வாக்கு திமுக கூட்டணியி்ல் இருந்து மாற்றி அதிமுகவிற்கு சென்றதால் மொத்தமுள்ள 14 உறுப்பினர்களி்ல் 13 வாக்குகள் பதிவாகின, இதில் அதிமுக 7 வாக்குகளும், திமுக 6 வாக்குகளும் பெற்றதால் கடைசி நிமிடத்தில் துணை தலைவர் பதவியை திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் தவறவிட்டது.
இதனைத் தாெடர்ந்து அதிமுக ஊராட்சி மன்ற துணை தலைவராக தேவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"மொத்த முள்ள 14 இடங்களில் திமுக 6 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தலைவர் பதவியை திமுகவும் துணைத் தலைவர் பதவி காங்கிரஸிற்கும் என திமுக தலைமை அறிவித்திருந்த நிலையி்ல், திமுக உறுப்பினர் தாமதமாக வந்து வாக்களிக்க முடியாமல் சென்றதும், மற்றொரு வாக்கினை கூட்டணியில் இருந்த ஒருவர் மாற்றி அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தது தொடர்பாக விசாரித்து தலைமைக்கு தெரிவிக்கப்படும்", என திமுக மாவட்ட செயலாளர் முபாரக் தெரிவித்தார்.