திருப்பூர்: ஆர்எஸ்எஸ் இந்து நாட்டை உருவாக்குவதற்கு முன்பாகவே பாஜகவின் தயவோடு தப்பிச்சென்ற நித்தியானந்தா கைலாசா என்னும் இந்து நாட்டை உருவாக்கி உள்ளார் என திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பூர்: ஆர்எஸ்எஸ் இந்து நாட்டை உருவாக்குவதற்கு முன்பாகவே பாஜகவின் தயவோடு தப்பிச்சென்ற நித்தியானந்தா கைலாசா என்னும் இந்து நாட்டை உருவாக்கி உள்ளார் என திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பூரில் திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ் சந்தா அளிப்பு விழா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பாராட்டு விழா ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பாஜக நிறைவேற்றி வருவதாகவும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா , நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தையும் திணித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் எனவும் இதை இந்து நாடாக ஆக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார் ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு முன்னதாகவே மத்திய பாஜக அரசின் தயவோடு தப்பிச்சென்று தற்போது கைலாசா எனும் நாட்டை நித்தியானந்தா உருவாக்கி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்தக் கூட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் திராவிடர் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ் சந்தா அளிப்பு விழா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பாராட்டு விழா ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பாஜக நிறைவேற்றி வருவதாகவும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா , நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தையும் திணித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் எனவும் இதை இந்து நாடாக ஆக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார் ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு முன்னதாகவே மத்திய பாஜக அரசின் தயவோடு தப்பிச்சென்று தற்போது கைலாசா எனும் நாட்டை நித்தியானந்தா உருவாக்கி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்தக் கூட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் திராவிடர் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.