ரூட்ஸ் நிறுவன பெட்ரோல் பங்கில் பெண்களை திருட்டுத்தனமாக எடுத்த வீடியோ வெளியிட்ட விவகாரம்: தனியார் டிவி நிருபர் மருது உள்ளிட்ட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை எருக்கம்பெனி பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்களின் உடைமாற்றும் வீடியோவை ஊடகங்களில் வெளியிட காரணமாக இருந்த மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை எருக்கம்பெனி பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்களின் உடைமாற்றும் வீடியோவை ஊடகங்களில் வெளியிட காரணமாக இருந்த மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வீடியோ வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வீடியோவை எடுத்த சுபாஷ், ஊடகத்தில் வெளியிட்ட கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர் மருதாச்சலம், ஊடகத்தில் வெளியிட காரணமாக இருந்த மணிகண்டன் ஆகியோரை இந்திய தண்டனைச் சட்டம் 354(c),66(e),67(a) தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, 4- பெண்களுக்கு எதிரான குற்றம் 2002,3, 4&6 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு அவர்களை கைதி செய்து நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன் (35) மற்றும் சவிதா(30). இவர்கள் எருக்கம்பெனி பகுதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்திற்க்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா மற்றும் சிலர் தாங்கள் பணி புரிந்து வரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் உடைமாற்றி கொண்டிருந்த போது அங்கு ரகசியமாக வீடியோ எடுப்பது போன்று தெரிந்துள்ளது. இதையடுத்து சபிதா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் கணவர் மணிகண்டன் சூப்பர்வைசர் சுபாஸ் மீது புகார் தெரிவித்தார். 

பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் புகார் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தராததால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுபாஷ் என்பவரால் பெட்ரோல் பங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஊடகங்களில் பரவியது. இதையடுத்து, அதில் சம்பத்தப்பட்ட மூவரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...