திருப்பூர்: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர்: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. திருப்பூரில் 80% கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவிடத்திலிருந்து மத்திய தபால் நிலையம் வரை சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும் கார்ப்பரேட்களுக்காக அரசை நடத்தி வரும் பாஜக அரசுக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் துணை போய்க் கொண்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், மத்திய அரசு இப்போக்கை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. திருப்பூரில் 80% கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவிடத்திலிருந்து மத்திய தபால் நிலையம் வரை சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும் கார்ப்பரேட்களுக்காக அரசை நடத்தி வரும் பாஜக அரசுக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் துணை போய்க் கொண்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், மத்திய அரசு இப்போக்கை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.