தொழிற்சங்களின் முழு அடைப்பு போராட்டம்: திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது

திருப்பூர்: நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட தொழில் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட தொழில் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்து விட்டதாகவும் தொழில்கள் நசிந்து விட்டதாகவும் கூறி 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதற்கு தமிழகத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று திருப்பூரில் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காதர் பேட்டையில் உள்ள பெரும்பாலான பனியன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே போல், பாத்திர தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனிடையே, திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...