நீலகிரி: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெடிமருந்து உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெடிமருந்து உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.

தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், உதகை பேருந்து நிலையத்திலிருந்து மைசூர், பெங்களூர் செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், உதகை, கூடலூர் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு, கண்ணனூர், கோழிக்கோடு செல்லும் பேருந்துகள் பாதுகாப்பு கருதி பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உதகையிலிருந்து கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் மலை காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. போராட்டம் காரணமாக கேரளா செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மலைக்காய் கறிகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.