கோவை: கோவை உக்கடம் பகுதியில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவை உக்கடம் பகுதியில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபகாலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கடந்தாண்டு மொத்தம் 425 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கோவை உக்கடம் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் தனது பெற்றோருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அந்த இளம் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் முகம்மது அசன் (53) என்ற முதியவர், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்துப் புகுந்து கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து முதியவர் முகமது அசனை கைது செய்த கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் பிரபாவதி, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார். மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.