மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம்; கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

கோவை: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கோவை: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், எல்பிஎப் உள்ளிட்ட 10 சங்கங்களில் சார்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கக்கூடாது, குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க சட்டம் இயற்றவேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட கால பணி முறையை கைவிட வேண்டும், அமைப்பு சார தொழிலாளருக்கான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும், மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள செல்லும் 27 பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் பேசுகையில், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் நடைபெறும் பந்த் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளா செல்லும் பயணிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கினர். அதே சமயம் கோவை மாநகர் பகுதிகளில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...