கோவை: வால்பாறை அருகே உள்ள காபி தோட்டத்தின் முள்வேலியில் சிக்கிய கரடியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் கரடியை வனத்துக்குள் விரட்டினர்.
கோவை: வால்பாறை அருகே உள்ள காபி தோட்டத்தின் முள்வேலியில் சிக்கிய கரடியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் கரடியை வனத்துக்குள் விரட்டினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கரடி.புலி, சிறுத்தை, யானை உட்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த பழைய வால்பாறையில் உள்ள காபி தோட்டத்தில் உள்ள முள் வேலியில் கரடி ஒன்று சிக்கிக் கொண்டுள்ளதாக வனத்துறைக்கு நிர்வாகம் மூலம் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து 10க்கும் வனத்துறையினர் காபி தோட்ட காவலர்கள் விரைந்து வந்து கரடியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உறுமி கொண்டிருந்த கரடியை தீ பந்தங்களைக் காட்டி அமைதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து, மரங்களைக் கொண்டு பாதுகாப்பு வேலி அமைத்து விட்டு கரடி சிக்கியுள்ள முள் வேலி துண்டிக்கப்பட்டது.
பின்னர், முள் வேலியில் சிக்கிய கரடி விடுபட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. கரடி பத்திரமாக மீட்கப்பட்டதற்கு வன உயிரின ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.