திருப்பூர்: முறையற்ற செயலை முறையாக செய்து இருப்பதன் மூலமே அதிமுக கூட்டணி தமிழகத்தில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.
திருப்பூர்: முறையற்ற செயலை முறையாக செய்து இருப்பதன் மூலமே அதிமுக கூட்டணி தமிழகத்தில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.
திருப்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அதன் காரணமாகவே பணிகளை துவங்குவதற்கான விழாக்களில் என்னை அழைப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து வருகின்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த முறைகேடுகளை விசாரிப்பதற்கு தனி ஆணையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறையற்ற செயலை முறையாக தேர்தல் ஆணையம் செய்ததன் காரணமாகவே அதிமுக கூட்டணி இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் இல்லாவிட்டால் படுதோல்வியை சந்தித்து இருக்கும் எனவும் குறிப்பிட்டார். திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு மூன்றாவது இடம் பிடித்தவரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததன் மூலமாகவே அதன் முறையற்ற செயல் தெரிய வருகிறது எனவே இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அளிக்க இருப்பதாக கூறினார்.
குடியுரிமை திருத்த சட்ட மசோதா அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால் கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன, அதற்கு அந்தந்த மாநிலங்களுக்கு உரிமை உண்டு எனவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாளும் பின்வாங்க மாட்டோம் என அமித்ஷா கூறியுள்ள நிலையில் மக்களின் போராட்டங்களே அவர்களுக்கு உணர்த்தும் என்று அவர் தெரிவித்தார்.