நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பாதியளவு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பாதியளவு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டு காலனி பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் வழியில், பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் கால் மண்ணிற்குள் தெரிந்துள்ளது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்த்த போது, பிறந்த குழந்தையை லேசான மண்மூடி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோத்தகிரி காவல்துறையினர், பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றினர். இந்த பச்சிளங் குழந்தை தவறான வழியில் பிறந்ததால் வீசப்பட்டதா? அல்லது வேரேதேனும் காரணங்கள் உள்ளதா? வீசியவர்கள் யார்? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.