சிலிண்டர் விலை உயர்வால் விநியோகஸ்தர்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல்; சிசிடிவி காட்சி வெளியீடு

கோவை: கோவை மாவட்டத்தில் சமீபகாலமாகவே செல்போன் பறிப்பு, சங்கிலி பறிப்பு, இருசக்கர வாகனம் திருட்டு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிலிண்டர் விலை உயர்வால் விநியோகஸ்தர்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல்; ஒன்று கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் சமீபகாலமாகவே செல்போன் பறிப்பு, சங்கிலி பறிப்பு, இருசக்கர வாகனம் திருட்டு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிலிண்டர் விலை உயர்வால் விநியோகஸ்தர்களை குறிவைக்கும் கொள்ளை கும்பல்; ஒன்று கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

இப்படி, கொள்ளைக் கும்பல்கள் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் விநியோகஸ்தரின் சிலிண்டரையும் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அப்புசாமி லேஅவுட் அருகே புலியகுளம்-ரேஸ்கோர்ஸ் செல்லும் சாலையில் வீடுகளுக்கு சிலிண்டர் போட்டுக்கொண்டிருந்த விநியோகஸ்தரின் சிலிண்டரை அவரது வாகனத்திலிருந்து திருடிச் சென்றுள்ளது ஒரு கும்பல்.

இதைத்தொடர்ந்து அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு நபர் சிலிண்டரை திருடும் நோக்கத்தோடு அந்த பகுதியில் சுற்றி வந்ததும், பின்னர் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிலிண்டரை எடுத்து மற்றொரு நபருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து டி-1போலீசார், சிலிண்டரை தூக்கி சென்றவர்களை சிசிடிவி கட்சிகளின் அடையாளத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாளுக்கு நாள் சிலிண்டரின் விலை உயர்வு ஏறிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் சிலிண்டர்களை குறிவைத்து திருடும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...