கோவை: கோவை அடுத்த நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரி வளாகத்தில் உலக சாதனை முயற்சியாக ஆயிரம் பறையிசை கலைஞர்கள் ஒன்று கூடி ஓரே இடத்தில் பறை இசைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கோவை: கோவை அடுத்த நீலாம்பூரில் உள்ள கதிர் கல்லூரி வளாகத்தில் உலக சாதனை முயற்சியாக ஆயிரம் பறையிசை கலைஞர்கள் ஒன்று கூடி ஓரே இடத்தில் பறை இசைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கிராமிய புதல்வன் என்ற குழு ஒருங்கிணைப்பின் பேரில் கோவை மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறையிசை குழுக்கள் ஒன்றாக சேர்ந்து பறை வடிவில் வட்டமாக நின்று பறையடித்தனர். பறையிசை கலைஞர் வேலு ஆசான் மற்றும் கிராமிய புதல்வன் கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் பகையரசன் ஆகியோர் வழிகாட்டுதலில் இந்த சாதனை முயற்சியானது நடைபெற்றது.

5 வயது சிறுமி முதல் 50 வயது பெரியவர் வரை இந்த பறையிசை சாதனை முயற்சியில் பங்கெடுத்துப் பறை இசைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் பறைவடிவில் வட்டமாக நின்று பறையடித்த கலைஞர்கள் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ரெக்கார்ட்ஸ் போன்ற சாதனைகளை பதிவு செய்யும் அமைப்பின் சான்றிதழ்களை பெற்றனர்.
கிராமிய புதல்வன் என்ற குழு ஒருங்கிணைப்பின் பேரில் கோவை மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறையிசை குழுக்கள் ஒன்றாக சேர்ந்து பறை வடிவில் வட்டமாக நின்று பறையடித்தனர். பறையிசை கலைஞர் வேலு ஆசான் மற்றும் கிராமிய புதல்வன் கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் பகையரசன் ஆகியோர் வழிகாட்டுதலில் இந்த சாதனை முயற்சியானது நடைபெற்றது.

5 வயது சிறுமி முதல் 50 வயது பெரியவர் வரை இந்த பறையிசை சாதனை முயற்சியில் பங்கெடுத்துப் பறை இசைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் பறைவடிவில் வட்டமாக நின்று பறையடித்த கலைஞர்கள் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லிம்கா புக் ரெக்கார்ட்ஸ் போன்ற சாதனைகளை பதிவு செய்யும் அமைப்பின் சான்றிதழ்களை பெற்றனர்.