திருப்பூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்; 3 மணி நேர நிலவரப்படி 56.69 சதவீதம் வாக்குகள் பதிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நேர நிலவரப்படி 56.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 3 மணி நேர நிலவரப்படி 56.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் 999 பதவிகளுக்கு 3088 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 396, ஊத்துக்குளியில் 445, காங்கேயத்தில் 218, பல்லடம் 590, வெள்ளகோவில் 161, மூலனூர் 189 மற்றும் தாராபுரம் 294 என மொத்தம் 2293 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 247 பேர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64, ஊத்துக்குளியில் 136, காங்கேயத்தில் 44, பல்லடம் 79, வெள்ளகோவில் 18 , மூலனூர் 50, மற்றும் தாராபுரம் 54 என மொத்தம் 445 பேரும் இன்றைய தேர்தலை சந்திக்கின்றனர். இவர்கள் தவிர போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் 4 பேர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 38, ஊத்துக்குளியில் 65, காங்கேயம் 48, பல்லடம் 49, வெள்ளகோவில் 24, மூலனூர் 51 மற்றும் தாராபுரம் 41 என 312 பேர் இன்றைய தேர்தலை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 3 மணி நேர நிலவரப்படி 56.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி தாராபுரம் 58.81%, காங்கேயம் 64.15%, மூலனூர் 63.32%, பல்லடம் 49.06%, திருப்பூர் 52.28%, ஊத்துக்குளி 65.46%, வெள்ளக்கோவில் 52.80% என மொத்தம் 56.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...