கோவை: கோவை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 12 மணி நேர நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 12 மணி நேர நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக, மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1,220 பதவிகளுக்கு 2,939 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 5 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,46,350 வாக்காளர்கள் உள்ளனர். 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தமாக 293 வாக்குச்சாவடி மையங்களில் 642 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 148 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, 48 மையங்களில் ஒளிப்பதிவு செய்யவும், 24 மையங்களில் வெப் கேமரா மூலமும் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மையங்களில் நுண் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக 4,494 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் உள்ளனர். மேலும், 2,350 காவலர்கள் 400 ஊர்காவல் படையினர், 100 முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது பகல் 12 மணி நேர நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, வரும் 30ம் தேதி காரமடை, அன்னூர், சர்க்கார் சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர் மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக, மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1,220 பதவிகளுக்கு 2,939 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 5 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,46,350 வாக்காளர்கள் உள்ளனர். 5 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தமாக 293 வாக்குச்சாவடி மையங்களில் 642 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 148 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, 48 மையங்களில் ஒளிப்பதிவு செய்யவும், 24 மையங்களில் வெப் கேமரா மூலமும் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மையங்களில் நுண் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக 4,494 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் உள்ளனர். மேலும், 2,350 காவலர்கள் 400 ஊர்காவல் படையினர், 100 முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது பகல் 12 மணி நேர நிலவரப்படி 31.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, வரும் 30ம் தேதி காரமடை, அன்னூர், சர்க்கார் சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர் மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.