கோவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

கோவை: கோவை அடுத்த செட்டிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் டேங்கர் லாரி கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அடுத்த செட்டிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் டேங்கர் லாரி கார் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வெளியூர் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பலர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

குறிப்பாக, கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி செல்பவர்களும், அதேபோல அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை போன்ற சாலைகளில் பயணிப்பவர்களும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் கோவை விமான நிலையம் நோக்கி எல் அன்ட் டி பைபாஸ் சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர்.

 

அப்போது, செட்டிபாளையம் சுங்கச்சாவடி அருகே எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியானார். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் ரமேஷ் (50), ஆதிஷா (12), மீரா (37), ரிஷிகேஷ் (7) என தெரியவந்துள்ளது. மேலும் காயமடைந்த விபின் ஜார்ஜ் (43), நிரஞ்சன் (11), ராஜா (44), ஆதிரா(16) ஆகியோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...