டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் புகுந்து மிரட்டல் விடுத்த நபர்களை கண்டித்து கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை: டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்த மிரட்டல் விடுத்த நபர்களை கண்டித்து கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்த மிரட்டல் விடுத்த நபர்களை கண்டித்து கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



நாடாளுமன்ற மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வருகை பதிவு குறித்து நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் செய்தி வெளியானது. அதில் பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மிக குறைவான நாட்கள் மட்டும் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சிலர் நேற்று சென்னை டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றம் செய்தி குறிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் நுழைந்து மிரட்டல் விடுத்ததை கண்டித்து கோவை மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, கருத்து சுதந்திரத்திற்கு மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது, தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பத்திரிகையாளர் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பல்வேறு ஊடகங்களில் பணிபுரிபவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....