கோவை: குழந்தை ஏசுவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: குழந்தை ஏசுவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக கோவையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக கோவையிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கோவையில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழைமையான புனித மைக்கேல் தேவாலயத்தில் கோவை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது
.

அப்போது, குழந்தை இயேசுவின் உருவம் கொண்ட பொம்மையை கையில் ஏந்தியபடி வந்த தலைமை ஆயர், அதைக் கொண்டு குடிலில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிலில் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பை போற்றும் விதமாக பாடல்கள் பாடப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு துவங்கிய திருப்பலி மற்றும் பிராத்தனை நிகழ்ச்சிகள் அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, காலையில் மாற்று மதத்தினருக்கும், அண்டை வீட்டாருக்கும் கேக் மற்றும் உணவு பொருட்களை பரிமாறிக் கொண்டு, அனைத்து மதத்தினருடன் இணைந்து இந்த கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட இருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டும், இணைப்புகளை பரிமாறிக்கொண்டும், உறவினர் வீடுகளுக்கு சென்று விளையாடியும் உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையினை கொண்டாட இருப்பதாக தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.