திருப்பூர்: எட்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்யக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: எட்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்யக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரைச் சேர்ந்த அருணாதேவி(24) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில், ஏப்ரல் 16ம் தேதி முதல் குழந்தைக்கு மஞ்சள் காமாலை என 8 நாட்கள் இங்குபேட்டரில் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, ஏப்ரல் 24ம் தேதி அருணாதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது, மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினால் அடுத்த நாள் காய்ச்சல் அதிக அளவு இருந்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் அருணாதேவி உயிரிழந்தார்.

இந்நிலையில், தங்கள் மகளின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எட்டு மாதங்கள் கழித்து அருணாதேவியின் உறவினர்கள் இன்று அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரைச் சேர்ந்த அருணாதேவி(24) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில், ஏப்ரல் 16ம் தேதி முதல் குழந்தைக்கு மஞ்சள் காமாலை என 8 நாட்கள் இங்குபேட்டரில் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, ஏப்ரல் 24ம் தேதி அருணாதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது, மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினால் அடுத்த நாள் காய்ச்சல் அதிக அளவு இருந்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் அருணாதேவி உயிரிழந்தார்.

இந்நிலையில், தங்கள் மகளின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எட்டு மாதங்கள் கழித்து அருணாதேவியின் உறவினர்கள் இன்று அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.