குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

கோவை: குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை சமூக மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பினை சேர்ந்த மாணவர்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை சமூக மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பினை சேர்ந்த மாணவர்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை ரயில் நிலையம் முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல் அலுவலகம் வந்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.



அப்போது, 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்தப்படும் எனவும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.



 இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...