கோவை: குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை சமூக மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பினை சேர்ந்த மாணவர்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை சமூக மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பினை சேர்ந்த மாணவர்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரயில் நிலையம் முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல் அலுவலகம் வந்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது, 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்தப்படும் எனவும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தனர்.

கோவை ரயில் நிலையம் முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல் அலுவலகம் வந்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய போது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது, 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்தப்படும் எனவும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தனர்.