நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் மறுசுழற்சி செய்யும் வகையில் காகிதம் அட்டைகள் மூலம் செய்யப்பட்டுள்ள ஸ்டார், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் மறுசுழற்சி செய்யும் வகையில் காகிதம் அட்டைகள் மூலம் செய்யப்பட்டுள்ள ஸ்டார், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அவரவர் வீடுகளில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை வைத்து தங்களது இல்லத்தில் அழகு படுத்துவது வழக்கம். இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போன்ற பொம்மை, தலையில் அணியும் தொப்பி, மரம், மணி, பந்து, ஸ்டார் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை வாங்குவதில் குழந்தைகளும் பெரியவர்களும் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை இருப்பதால் தற்போது கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களும் பிளாஸ்டிக்கை தவிர்த்து காகிதம் அட்டை மற்றும் மறுசுழற்சி செய்யும் பொருட்களாக விற்பனைக்கு அதிக அளவில் சந்தைக்கு வந்துள்ளன. புதுமையான பொருட்கள் மூலமாக அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.