வால்பாறை அய்யப்பன் கோவில் பாலகொம்பு ஊர்வலம்; ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலின் 33ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால கொம்பு ஊர்வலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று புறப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலின் 33ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால கொம்பு ஊர்வலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று புறப்பட்டது.



ஊர்வலத்தில் வான வேடிக்கையுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, சென்டை மேளத்துடன் குழந்தைகள் தீபம் ஏந்தி பக்தர்கள் வந்தனர். 

வெளிச்சப்பாடு குழுவினரின் ஆட்டத்துடன் பால கொம்பை அய்யப்ப பக்தர்கள் 'சாமியே சரணம் அய்யப்பா' என்ற கோஷமிட்டபடி கலந்து கொண்டனர். 



ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக மதியம் மாபெறும் அன்னதானம் நிகழ்வு மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...