கோவை: கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலின் 33ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால கொம்பு ஊர்வலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று புறப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலின் 33ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால கொம்பு ஊர்வலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று புறப்பட்டது.

ஊர்வலத்தில் வான வேடிக்கையுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, சென்டை மேளத்துடன் குழந்தைகள் தீபம் ஏந்தி பக்தர்கள் வந்தனர்.
வெளிச்சப்பாடு குழுவினரின் ஆட்டத்துடன் பால கொம்பை அய்யப்ப பக்தர்கள் 'சாமியே சரணம் அய்யப்பா' என்ற கோஷமிட்டபடி கலந்து கொண்டனர்.

ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மதியம் மாபெறும் அன்னதானம் நிகழ்வு மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஊர்வலத்தில் வான வேடிக்கையுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, சென்டை மேளத்துடன் குழந்தைகள் தீபம் ஏந்தி பக்தர்கள் வந்தனர்.
வெளிச்சப்பாடு குழுவினரின் ஆட்டத்துடன் பால கொம்பை அய்யப்ப பக்தர்கள் 'சாமியே சரணம் அய்யப்பா' என்ற கோஷமிட்டபடி கலந்து கொண்டனர்.

ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மதியம் மாபெறும் அன்னதானம் நிகழ்வு மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.