தென்னிந்திய அளவிலான பூனைகள் கண்காட்சி; பூனைகளால் நோய் பரவுவதாக மக்களிடையே பெருமளவில் மூட நம்பிக்கை உள்ளது - பூனைகள் வளர்ப்பு கூட்டமைப்பினர்

கோவை: பூனைகளால் நோய் பரவுகிறது என்ற மூட நம்பிக்கை இன்னும் மக்களிடையே பெருமளவில் உள்ளதாக பூனைகள் வளர்ப்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


கோவை: பூனைகளால் நோய் பரவுகிறது என்ற மூட நம்பிக்கை இன்னும் மக்களிடையே பெருமளவில் உள்ளதாக பூனைகள் வளர்ப்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 



கோயமுத்தூர் கேட்டரி கிளப் சார்பில் சர்வதேச கிறிஸ்துமஸ் சாம்பியன்ஷிப், பூனைகள் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ அவினாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கேரளா ஹைதராபாத், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 150க்கும் மேற்பட்ட பூனைகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. 

தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் பூனைகளின் வகைகளை அறிந்து கொள்ளவும் அதனை பாதுகாத்திடும் நோக்கில் இந்த சர்வதேச பூனை கண்காட்சி நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



இந்த கண்காட்சியில் பெர்சியன், பெர்சியன் லாங்ஹேர், சியமிஸ், மெயின் கவுன், பிரிட்டிஷ் ஷார் ஹேர் உள்ளிட்ட 20 வகையான பூனைகள் இடம் பெற்று இருந்தது. இன்று துவங்கிய இந்த பூனை கண்காட்சி நாளை வரை நடக்கிறது. இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பூனைகளுக்கு பேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் இதில் வெற்றி பெறும் பூனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பூனைகள் குறித்து பல்வேறு வகையான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் 

பூனைகளால் நோய் பரவுகிறது என்ற மூட நம்பிக்கை இன்னும் மக்களிடையே பெருமளவில் உள்ளது என பூனை வளர்பவர்கள் தெரிவித்தனர். தற்போதைய குழந்தைகள் கார்டூன் மற்றும் விளையாட அதிக அளவில் அலைபேசியை உபயோகித்து வருகின்றனர். இதனால் மனரீதியாகவும் உடல் ரீதியாக பாதிப்புகளை தவிர்க்க செல்ல பிராணிகளுடன் தங்களது நேரத்தை செலவிட வேண்டும் என்றனர். 

தமிழகத்தில் பூனைகளுக்கு என முதல் முறையாக இந்த கண்காட்சி நடப்பதாகவும் இது பூனை வளர்ப்பவர்களுக்கு இடையே வரவேற்பைப் பெற்று உள்ளதாக பூனை வளர்ப்பு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த பூனைகள் கண்காட்சி தங்களை வெகுவாக கவர்ந்ததாக அங்கு இருந்த பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....