மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் ஆய்வு செய்தார்.

கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் ஆய்வு செய்தார். 



மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். 



இந்த ரயில் பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், மலை ரயிலின் பயணம் தடைப்பட்டு வருகிறது. இதையடுத்து சேலம் கோட்ட ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்காக மேட்டுப்பாளையம் வந்து அங்கு இருந்து சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

அப்போது பேசிய அவர், மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் ரயில் தண்டவாளங்களில் ஆய்வு செய்யப்படும் என்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக லிப்ட் அமைத்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...