கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக மத்திய அரசு இம்மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள்,முஸ்லீம் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படுவதாக கூறியும், திருத்தப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜக்கிய ஜமாத் பேரவை, மேட்டுப்பாளையம் வட்டார ஜாமத் உலமா சபை சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அனைத்து பள்ளிவாசல் உலாமாக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.
மேலும், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளதாக குற்றம்சாட்டிய இஸ்லாமியர்கள், மத்திய அரசு இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக மத்திய அரசு இம்மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள்,முஸ்லீம் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படுவதாக கூறியும், திருத்தப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜக்கிய ஜமாத் பேரவை, மேட்டுப்பாளையம் வட்டார ஜாமத் உலமா சபை சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அனைத்து பள்ளிவாசல் உலாமாக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.
மேலும், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளதாக குற்றம்சாட்டிய இஸ்லாமியர்கள், மத்திய அரசு இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.