குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக மத்திய அரசு இம்மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள்,முஸ்லீம் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படுவதாக கூறியும், திருத்தப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜக்கிய ஜமாத் பேரவை, மேட்டுப்பாளையம் வட்டார ஜாமத் உலமா சபை சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அனைத்து பள்ளிவாசல் உலாமாக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.

மேலும், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவால் நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளதாக குற்றம்சாட்டிய இஸ்லாமியர்கள், மத்திய அரசு இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....