குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு; கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம்

கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கடையடைப்பு மற்றும் கருப்புக்கொடி கட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கடையடைப்பு மற்றும் கருப்புக்கொடி கட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது.



நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள், பல்வேறு இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் தங்களின் போராட்டங்கள் வாயிலாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்டபடி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கருப்பு கொடி கட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கோட்டை மேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், உக்கடம், டவுன்ஹால், போத்தனூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.



அதேபோல, சிறு வணிக நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்கள் என கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....