கொடிசியா சார்பில் கோவையில் ஷாப்பிங் திருவிழா -2019' வரும் 24ம் தேதி துவங்குகிறது

கோவை: கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொடிசியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.


கோவை: கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொடிசியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து கொடிசியா தலைவர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது : 







எழாவது 'கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொசிடியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் வணிக பெருமக்கள், வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன்படுவார்கள். 

இதுகுறித்து 'கோவை ஷாப்பிங் திருவிழா -2019' வின் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: 

புது பொருட்களை பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தவும், வாங்கவும், பொருட்களை தொழில் நிறுவனங்களை விற்கவும் இந்த திருவிழா முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவு, வீட்டு உபயோக பொருட்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விவசாய பொருட்கள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.

தினமும் மாலை நிகழ்ச்சிகள் உள்ளன. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, கலை நிகிழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

1.5 லட்சம் சதுர அடியில், 500க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 

பெற்றோரும், குழந்தைகளும், நண்பர்களும் சந்தோஷமாக ஷாப்பிங் செய்ய இந்த திருவிழா அமையும். 

இந்திய கைவினை பொருட்கள் துறை மூலம் நேரடி பங்கேற்பு, பழங்குடியினர், மகளிர் சுய உதவி குழுவினரும் நேரடியாக பங்கேற்கிறார்கள்.

இங்கு விற்கப்படும் பொருட்கள் மிக குறைந்த விலையில், தள்ளுபடி விலையில் கிடைக்கும் எனவும் நபர் ஒருவருக்கு நுழைவு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.5 வயது குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. தினமும் 10 ஆயிரம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

இந்த திருவிழாவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் துவக்கி வைக்கிறார். இவ்வாறு பொன்னுசாமி கூறினார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...