கொடிசியா சார்பில் கோவையில் ஷாப்பிங் திருவிழா -2019' வரும் 24ம் தேதி துவங்குகிறது

கோவை: கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொடிசியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.


கோவை: கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொடிசியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது.

இது குறித்து கொடிசியா தலைவர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது : 







எழாவது 'கோவை ஷாப்பிங் திருவிழா -2019' கோவை கொசிடியா அரங்கில் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1 ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதன் மூலம் வணிக பெருமக்கள், வாடிக்கையாளர்கள் பெரிதும் பயன்படுவார்கள். 

இதுகுறித்து 'கோவை ஷாப்பிங் திருவிழா -2019' வின் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: 

புது பொருட்களை பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தவும், வாங்கவும், பொருட்களை தொழில் நிறுவனங்களை விற்கவும் இந்த திருவிழா முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவு, வீட்டு உபயோக பொருட்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், விவசாய பொருட்கள் இந்த திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.

தினமும் மாலை நிகழ்ச்சிகள் உள்ளன. இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, கலை நிகிழ்ச்சி ஆகியவை நடைபெறும்.

1.5 லட்சம் சதுர அடியில், 500க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 

பெற்றோரும், குழந்தைகளும், நண்பர்களும் சந்தோஷமாக ஷாப்பிங் செய்ய இந்த திருவிழா அமையும். 

இந்திய கைவினை பொருட்கள் துறை மூலம் நேரடி பங்கேற்பு, பழங்குடியினர், மகளிர் சுய உதவி குழுவினரும் நேரடியாக பங்கேற்கிறார்கள்.

இங்கு விற்கப்படும் பொருட்கள் மிக குறைந்த விலையில், தள்ளுபடி விலையில் கிடைக்கும் எனவும் நபர் ஒருவருக்கு நுழைவு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.5 வயது குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. தினமும் 10 ஆயிரம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

இந்த திருவிழாவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் துவக்கி வைக்கிறார். இவ்வாறு பொன்னுசாமி கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...