நாடு முழுவதும் அச்சத்தையும் கவலையும் அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்- எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

கோவை: "நாடு முழுவதும் அச்சத்தையும் கவலையும் அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை அவசர வழக்காக விசாரித்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்", என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


கோவை: "நாடு முழுவதும் அச்சத்தையும் கவலையும் அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை அவசர வழக்காக விசாரித்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்", என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். 

கோவை வின்சென்ட் ரோட்டில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-







குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு அரசியலமைப்புக்கு விரோதமாகவும், மதரீதியாக நாட்டு மக்களை பிளவு படுத்தும் வகையிலும் செயல்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. ஆனால் முஸ்லிம்களையும், ஈழத்தமிழர்களையும் புறக்கணிக்கிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு மக்களை மத ரீதியாக பிரிக்கும் நடவடிக்கை. 

மோடியின் பாஜக அரசையும், இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் ஆளும் அதிமுக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். அதிமுக அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். 

நாடு முழுவதும் அச்சத்தையும் கவலையும் அளிக்கும் இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை அவசர வழக்காக விசாரித்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது எஸ்டிபிஐ கட்சி மாநில பொருளாளர் அபுதாகிர், கோவை மத்திய மாவட்ட தலைவர் ராஜா உசேன், மாவட்ட பொதுச்செயலாளர் இசாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....