கோவை: குடியுரிமை பாதுகாப்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள வஉசி மைதானத்தில் எந்த நேரமும் மாணவர்கள் ஒருங்கிணையலாம் என்ற தகவலின் பேரில் போலீசார் மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
கோவை: குடியுரிமை பாதுகாப்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள வஉசி மைதானத்தில் எந்த நேரமும் மாணவர்கள் ஒருங்கிணையலாம் என்ற தகவலின் பேரில் போலீசார் மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
நாடு முழுவதும் குடியுரிமை பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் இந்திய மாணவர் சங்கத்தினர், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள், பிஷப் அப்பாசாமி கல்வியல் கல்லூரி மாணவர்கள் என தங்களின் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் எந்த நேரமும் வ உ சி மைதானத்தில் ஒருங்கிணையலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வஉசி மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

அதே போல, நாளை கோவை மாநகரின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து தங்களின் எதிர்ப்பை கடையடைப்பு, கருப்பு கொடி ஏற்றுதல், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த உள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் குடியுரிமை பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் இந்திய மாணவர் சங்கத்தினர், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள், பிஷப் அப்பாசாமி கல்வியல் கல்லூரி மாணவர்கள் என தங்களின் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் எந்த நேரமும் வ உ சி மைதானத்தில் ஒருங்கிணையலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் வஉசி மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

அதே போல, நாளை கோவை மாநகரின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து தங்களின் எதிர்ப்பை கடையடைப்பு, கருப்பு கொடி ஏற்றுதல், பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த உள்ளனர். இந்த நிலையில் கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.