குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர் போராட்டங்களால் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - டிஐஜி கார்த்திகேயன்

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்க இ-சலான் கருவிகள் காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 



இந்த நிகழ்வில் 112 இ-சலான் கருவிகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் டி.ஐ.ஜி கார்த்திகேயன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து டி ஐ ஜி கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது ;-

16 இ-சலான் கருவிகள் கோவையில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியதன் மூலம் இதுவரை 66 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 112 இ-சலான் கருவிகள் வழங்கியதன் மூலம் வரும் ஜனவரி முதல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் அபராதம் வசூலிப்பது சுலபமாக இருக்கும் என்றார்.

மேலும், தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்டத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....