குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர் போராட்டங்களால் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - டிஐஜி கார்த்திகேயன்

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்க இ-சலான் கருவிகள் காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 



இந்த நிகழ்வில் 112 இ-சலான் கருவிகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் டி.ஐ.ஜி கார்த்திகேயன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து டி ஐ ஜி கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது ;-

16 இ-சலான் கருவிகள் கோவையில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியதன் மூலம் இதுவரை 66 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 112 இ-சலான் கருவிகள் வழங்கியதன் மூலம் வரும் ஜனவரி முதல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் அபராதம் வசூலிப்பது சுலபமாக இருக்கும் என்றார்.

மேலும், தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்டத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...