திருப்பூர் இராக்கியாபாளையத்தில் காவல் நிலையம் கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் நெசவாளர்கள் மனு

திருப்பூர்: திருப்பூர் அருகே இராக்கியாபாளையம் பகுதியில் நெசவாளர்கள் உபயோகிக்கும் பாவடி மைதானத்தில் காவல் நிலையம் கட்டுவதை தடுத்த நிறுத்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே இராக்கியாபாளையம் பகுதியில் நெசவாளர்கள் உபயோகிக்கும் பாவடி மைதானத்தில் காவல் நிலையம் கட்டுவதை தடுத்த நிறுத்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், இராக்கியாபாளையம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் நெசவாளர்கள் பாவு நூல் காய வைக்கும் பாவடி மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.



இந்நிலையில், நெசவாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல் பாவடி மைதானத்திலுள்ள கற்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இந்த மைதானத்தில் காவல் நிலையம் கட்டினால் தங்களது நெசவு தொழில் பாதிக்கப்படும் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்களின் மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, காவல்நிலையம் அமைவதை கண்டித்து வரும் திங்களன்று இராக்கியாபாளையம் பகுதியில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....