திருப்பூர்: திருப்பூர் அருகே இராக்கியாபாளையம் பகுதியில் நெசவாளர்கள் உபயோகிக்கும் பாவடி மைதானத்தில் காவல் நிலையம் கட்டுவதை தடுத்த நிறுத்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே இராக்கியாபாளையம் பகுதியில் நெசவாளர்கள் உபயோகிக்கும் பாவடி மைதானத்தில் காவல் நிலையம் கட்டுவதை தடுத்த நிறுத்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், இராக்கியாபாளையம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் நெசவாளர்கள் பாவு நூல் காய வைக்கும் பாவடி மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நெசவாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல் பாவடி மைதானத்திலுள்ள கற்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இந்த மைதானத்தில் காவல் நிலையம் கட்டினால் தங்களது நெசவு தொழில் பாதிக்கப்படும் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்களின் மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, காவல்நிலையம் அமைவதை கண்டித்து வரும் திங்களன்று இராக்கியாபாளையம் பகுதியில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், இராக்கியாபாளையம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் நெசவாளர்கள் பாவு நூல் காய வைக்கும் பாவடி மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நெசவாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல் பாவடி மைதானத்திலுள்ள கற்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இந்த மைதானத்தில் காவல் நிலையம் கட்டினால் தங்களது நெசவு தொழில் பாதிக்கப்படும் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்களின் மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, காவல்நிலையம் அமைவதை கண்டித்து வரும் திங்களன்று இராக்கியாபாளையம் பகுதியில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.